In Perambalur the public to provide drinking water to the municipality to protest roadblock

road-roko-perambalur-thuraimangalamபெரம்பலூர் அருகே துரைமங்கலம் பகுதியில் குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் 100க்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துரைமங்களம் 9வது வார்டு பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

குடிநீர் குடிநீர் விநியோகம் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், பொது மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டுமென மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஆத்திரமடைந்த 9வது வார்டு பகுதி பொது மக்கள் துறைமங்களம் மூன்று ரோடு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் வட்டாசியர், பெரம்பலூர் போலீசார் மற்றும் நகராட்சி தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று,போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, முறையாக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பொது மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வலியுறுத்தி நடந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால், துரைமங்களம் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் ஏற்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!