Incessant rains in Perambalur district; 3 lakes full!

பெரம்பலூர் மாவட்டத்தில், தற்போது பெய்து வரும், தொடர் மழையால், வடக்கலூர் ஏரி, அரும்பாவூர் பெரிய ஏரி, வெங்கலம் பெரிய ஏரி ஆகியவை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. விசுவகுடி அணையில் பாதி கொள்ளளவு நீர் நிரம்பியுள்ளதால் உபரி நீர் திறக்கப்பட்டு வெங்கலம் ஏரிக்குசெல்கிறது.

இன்று காலை வரை பதிவான மழையளவு விவரம் (மி.மீ-ல்): செட்டிக்குளம் 10, பாடாலூர் 28, அகரம்சிகூர், 36, லப்பைக்குடிக்காடு, 88, புதுவேட்டக்குடி 8, பெரம்பலூர் 17, எறையூர், 15, கிருஷ்ணாபுரம் 9, தழுதாழை 16, வி.களத்தூர் 20, வேப்பந்தட்டை 15 என மொத்தம் 240 மி.மீ பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 21.82 மி.மீ.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!