It has been raining at various places in Perambalur district since last night! Intensity of sowing works !!


பெரம்பலூர் மாவட்டத்தின் கை.களத்தூர் சுற்றுப்பகுதிகளில் நேற்று இரவு இருந்தும், பிற பகுதிகளில் இன்று காலையில் இருந்து பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இதனால், மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட மானவாரி பயிர்களை விதைப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இதில், பெரும்பாலான விவசாயிகளுக்கு விதைப்பு பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காததால், அருகில் உள்ள சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து லோடு ஆட்டோக்கள் மூலம் வரவழைத்து விதைப்பு பணிகளை செய்து வருகின்றனர்.

மேலும், பெய்து வரும் மழை ஆடி மாதத்தில் சாகுபடி செய்த மானாவாரி பயிர்களுக்கு சாதமாக உள்ளதால் உழவர்கள், பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் பெய்து மழையளவு விவரம்:

பெரம்பலூரில் இன்று காலை 6 மணி வரை பதிவான மழையளவு விவரம் : (மி.மீ-ல்)

பெரம்பலூர் 0, செட்டிக்குளம் 0, பாடாலூர் 2, அகரம் சிகூர் 0, லப்பைக்குடிக்காடு 0, புதுவேட்டக்குடி 1, எறையூர் 0, கிருஷ்ணாபுரம் 21, தழுதாழை 17, வ.களத்தூர் 4, வேப்பந்தட்டை 13இ என மொத்த மழையளவு : 58 மி.மீ., மாவட்டத்தின் சராசரி மழையவு ; 5.27 மி.மீ என பதிவாகி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!