கள்ளக்குறிச்சி: கள்ளச்சாரய பலி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்க்கவில்லை! காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் பேச கூட தயராக இல்லை ; அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

schedule
2024-06-24 | 14:11h
update
2024-06-24 | 15:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Kallakurichi Counterfeit liquor is a victim; Chief Minister M. K. Stalin did not visit in person! Congress leaders Mallikarjuna Kharge and Rahul are not even willing to talk; Minister L. Murugan interview!

Advertisement

இன்று டெல்லியில் சிறப்பு பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராளுமன்றத்திற்கு வெளியே ANI- செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் சுமார் 55 பேர் இறந்துள்ளனர். அதில் கிட்டத்தட்ட 36 பேர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும், சமூக நீதி பேசுகின்ற இண்டி கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று வரை அவர்களை நேரில் சென்று பார்க்காமல் இருக்கிறார் என்றும், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் போன்றவர்கள் இதைப் பற்றி பேசுவதற்கு கூட தயாராக இல்லை என்றும் கூறினார்.

மேலும், அதனால் தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்ற நமது தலைவர்கள் சிபிஐ விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர் என்று கூறினார்.

Tags: Tamil Nadu
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.01.2026 - 16:05:02
Privacy-Data & cookie usage: