lay stone of Valudur Jumma Mosque: A large number of people from abroad and local
ராமநாதபுரம் வழுதுாரில் ஜூம்மா பள்ளிவாசல் அடிக்கல்நாட்டு விழா வெகு விமர்சையாக நடந்தது. ராமநாதபுரம், வழுதுார் உட்பட இந்தியா, வெளிநாடுகளிலிருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் ராமேஸ்வரம் ரோட்டில் அமைந்துள்ள வழுதுார் கிராமத்தில் ஜூம்மா பள்ளிவாசல் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழா டிச.17 காலை 8 மணி முதல் 10 மணிக்குள் நடந்தது. ஜமாத் தலைவர் ஜமால் முகம்மது தலைமையில் நடந்த விழாவில் திண்டுக்கல் பேராசிரியர் ஹஜ்ரத் நிஜாமுதின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அடிக்கல் நாட்டினார். விழாவில் பங்கேற்ற பலரும் செங்கல் எடுத்து கொடுத்து அடுக்கி வைத்து அடிக்கல் நாட்டினர்.
மலேசியா ஜமாத் நிர்வாகி யாகத்அலி வரவேற்றார். ஜமாத் முன்னாள் செயலாளர் அன்சாரி, முன்னாள் பொருளாளர் துல்கர்னை, மரைக்காயர் முன்னிலை வகித்தனர். முன்னாள் செயலாளர் முஸ்தபாகமல் பள்ளிவாசல் சிறப்புகள் குறித்து பேசினார்.
சக்கரக்கோட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வள்ளல் டாக்டர் நுார்முகம்மது, தொழிலதிபர் ராமநாதபுரம் ஹசன்அலியார், ராமநாதபுரம் எப்.எஸ்.எம். ஷாப்பிங் மால் மற்றும் பெமினா குருப் ஆப் நிறுவன உரிமையாளர் ஜாகிர்உசேன் மற்றும் அவரது குடும்பத்தினர், இன்ஜினியர் பால்பாண்டி உட்பட ராமநாதபுரம், வாணி, மலேசியா, துபாய், சிங்கப்புர் உள்ளிட்ட இந்தியா மற்றும் வெளிநாடு ஜமாத் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
துபாய் ஜமாத் தலைவர் சகுபர் நன்றி தெரிவித்தார்.
வழுதுார் கிராம பொது மக்கள், ஜமாத் நிர்வாகிகள், பள்ளிவாசல் கட்டட கட்டிட குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.