MGR Birthday Celebration at Ramanathapuram

ராமநாதபுரம் அரண்மனையில் அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம் அரண்மனையில் எம்.ஜி.ஆர். 101 வது பிறந்தநாளை முன்னிட்டு பந்தல் அமைத்து பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது.

மாவட்ட அவைத்தலைவர் செ.முருகேசன் தலைமையில் எம்.ஜி.ஆர்.படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். பின் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் அரண்மனையில் குவிந்த மக்கள், வியாபாரிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

விழாவில் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செயலாளர் சாமிநாதன், முன்னாள் தொகுதி இணை செயலாளர் தஞ்சி சுரேஷ்குமார், முன்னாள் நகராட்சி தலைவர் ராமமுர்த்தி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகி சந்திரன், முன்னாள் கவுன்சிலர் ஆரிப்ராஜா, வீரபாண்டியன் உட்பட நுாற்று கணக்கானோர் பங்கேற்று எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!