Namakkal district administration on behalf of private sector employment in the coming 26 Campus interview

நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகிற 26ம் தேதி தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் வருகிற 26ம் தேதி மல்லசமுத்திரம் மகேந்திரா கல்லூரியில் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் மகேந்திரா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26ம் தேதி மல்லசமுத்திரம் மகேந்திரா இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் இன்ஜினியரிங் பட்டதாரிகளும், தையல் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.

சென்னை, கோவை, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சார்ந்த 50க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொள்ள உள்ளனர். இம்முகாமில் பங்கு கொள்ள விரும்பும் பணிநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் என்சிஎஸ்.ஜிஓவி.இன் என்ற வெப்சைட் முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைநாடுநர்கள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மகேந்திரா இன்ஜினியரிங் கல்லூரி மற்றம் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், தாலுக்கா அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்று பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 04286 222260 மற்றும் 9750052233 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!