Near Perambalur, women blocked the road with empty buckets, demanding drinking water! Lasted about 2.30 hours!

பெரம்பலூர் மாவட்டம், புதுவேட்டகுடியை சேர்ந்த 1வது வார்டு மக்களுக்கு சரி வர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனவும், அரசு அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டி இன்று காலை ஒன்று திரண்டு திட்டக்குடி – அரியலூர் சாலையில் காலிகுடங்களுடன் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம் நடப்பதை அறிந்த குன்னம் போலீசார் மற்றும் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர், ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மிக விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 2.30 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!