One person was killed by lightning near Perambalur today!

பெரம்பலூர் 4 ரோடு உள்ள முத்துலட்சுமி நகரில், அந்தூரை சேர்ந்த பூமாலை என்பவரது புதிய வீடு கட்டும் பணி, மேஸ்திரி சுப்பிரமணி என்பவர் தலைமையில் நடந்து கொண்டிருந்தது. இன்று மாலை 4 மணி அளவில், நெடுவாசலை சேர்ந்த முருகேசன் மனைவி சாவித்திரி என்பவர் உள்பட 3 பெண்கள், 7 ஆண்கள் என 10 பேர் கட்டிட வேலை செய்து கொண்டு இருந்தார். இந்நிலையில் இன்று மாலை சுமார் 4 மணி அளவில் இடி மின்னலுடன் மழை பெய்த நிலையில், வேலை செய்து கொண்டிருந்த சாவித்திரி மீது, இடி- மின்னல் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை , சக பணியார்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், வருவாய் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றும் இதே போல் இடி மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் இறந்த நிலையில் இன்றும் பெண் தொழிலாளி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!