Pensioner Grievance Day Meeting; Perambalur Collector Notification!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு கூடுதல் செயலாளர் நிதித்துறை மற்றும் இயக்குநர் ஓய்வூதிய இயக்குநரகம் சென்னை தலைமையில், கலெக்டர் முன்னிலையில் மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 08.02.2023 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகள் ஏதுமிருப்பின் அது குறித்த மனுக்களை 2 பிரதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிர்வரும் 24.01.2023-க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும் 08.02.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!