Pensioners Grievance Day Meeting: Perambalur Collector Information!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு கூடுதல் செயலாளர் நிதித்துறை மற்றும் இயக்குநர் / ஓய்வூதிய இயக்குநரகம் தலைமையில், கலெக்டர் முன்னிலையில் மாவட்ட ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 11.10.2022 அன்று காலை 10:30 மணி அளவில் நடைபெற உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த தமிழ்நாடு அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று கரூவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், தங்களது ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகள் ஏதும் இருப்பின் அது குறித்த மனுக்களை இரண்டு பிரதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் 28.9.2022-க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், 11.10.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.