People blocked the road in protest against painting the party’s color on the government electricity pole near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் ஊராட்சிக்கு உட்டபட்து கிருஷ்ணாபுரம் கிராமம். அந்த ஊரில்., ஆத்தூர் செல்லும் சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான மின் கம்பத்தில் விசிக -வின் கட்சிக் கொடியில் உள்ள வண்ணத்தை பூசி இருந்தது. இதை கண்ட போதுமக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரும்பாவூர் காவல் துறையினர், வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, கம்பத்தில் அக்கட்சியின் கொடி வண்ணத்தை நீக்கி இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது,