Perali substation, power outage notice!

பெரம்பலூர் மின்வாரிய உதவி செயற்பொறியளர் து. முத்தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வரும் பிப்.17 வெள்ளிக் கிழமை அன்று, அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கீ.புதூர், எஸ்.குடிக்காடு, வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய கிராமங்களில் அறிவிக்கபட்ட தினத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் வினியோகம் தடை செய்யபடும். பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர், மின்வினியோகம் வழங்கப்படும் என  தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!