Perambalur: All liquor shops to remain closed for one day; Collector’s announcement!
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக்கின் அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் வடலூர் ராமலிங்கர் நினைவு நாளினை முன்னிட்டு வரும் பிப்.1- ஞாயிற்று கிழமை அன்று ஒருநாள் மட்டும் உலர்தினமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.