Perambalur: Anitha assumes charge as the new District Superintendent of Police!
பெரம்பலூர் மாவட்டத்தின் 26 ஆவது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஜி.எஸ்.அனிதா பொறுப்பேற்றுக் கொண்டார். பெரம்பலூர் எஸ்.பி-யாக பணியாற்றி வந்த ஆதர்ஷ் பசேரா சென்னை சைபர் கிரைம் எஸ் பி ஆக பணியிட மாறுதல் செய்யப்பட்ட நிலையில், மதுரை துணைக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த ஜி.எஸ்.அனிதா கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.