சிறிய ஜவுளி பூங்கா அமைக்க தொழில் முனைவோருக்கு பெரம்பலூர் கலெக்டர் அழைப்பு!

schedule
2022-08-18 | 16:39h
update
2022-08-18 | 16:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Collector invites entrepreneurs to set up small textile park!

ஜவுளித் துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும்.

இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்த பட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்படவேண்டும்.

Advertisement

தகுதிவாய்ந்த திட்ட மதிப்பீட்டில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.

தற்போது தொழில் முனைவோர் கோரிக்கையை தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான தொழிற்பூங்காக்கள் அமைத்து நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும்.

மேலும், அதிக அளவில் அன்னிய செலாவணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கனவுத் திட்டம் ஆகும். எனவே, சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் அனைத்து தொழில் முனைவோரும் முன்வரவேண்டும் என கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

துணிநூல் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகம், No:30/3 நவலடியான் காம்ப்ளக்ஸ் முதல் தளம், தாந்தோணிமலை, கரூர் – 639-005. கைபேசி எண்: 94446 56445, 90925 90486 தொடர்பு கொண்டு பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 15:32:01
Privacy-Data & cookie usage: