Private Employment Camp in: Perambalur Collector issues employment orders to 147 people!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று கலெக்டர் கற்பகம் தலைமையில் நடந்தது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 788 வேலை நாடுநர்களும், 40க்கும் மேற்பட்ட வேலை தரும் நிறுவனங்களும் கலந்து கொண்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 147 பேர்களுக்கு, கலெக்டர் உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
வேப்பந்தட்டை யூனியன் சேர்மன் ராமலிங்கம், அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.