Perambalur Collector Participation in Veppanthattai Union Level Bank Managers Consultative Meeting

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், வட்டார அளவிலான வங்கி மேலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் இன்று நடந்தது. அதில் அவர் பேசியதாவது:

பாமர மக்களுக்கு தேவையான தனிநபர் விவசாயக் கடன் உதவிகளை வழங்க முன்வரவேண்டும். கல்விக்கடன், ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பு கடன், மகளிர் சுய உதவி தொழில் கடன் போன்ற கடன்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும். பொதுமக்களுக்கு தேவையான கடன் உதவிகளை காலதாமதம் செய்யாமல் தேவையின் அடிப்படையில் விரைந்து வழங்கவேண்டும். மேலும் ஒவ்வொரு வங்கி கிளையிலும், தகவல் மையம் அமைத்து மக்களுக்கு அரசின் நலத்திட்டங்களின் விவரங்களை விளக்கவேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார அளவிலான வங்கி மேலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெறும் என தெரிவித்தார்.

இதில் ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பரத்குமார், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் நவீன்குமார், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் செந்தில்குமார், தாட்கோ மாவட்ட மேலாளர் சியாமளா, ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி இயக்குநர் ஆனந்தி மற்றும் வங்கி கிளை மேலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!