மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பு:
பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது.
பெரம்பலூர் வட்டம், நொச்சியம் கிராமத்தில் உதவி ஆணையர் (கலால்) மு.பாலகிருஷ்ணன் தலைமையிலும்,
வேப்பந்தட்டை வட்டம், வெங்கனூர் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் மற்றும் பாதுகாப்பு நல அலுவலர் ப.கள்ளபிரான், தலைமையிலும்,
குன்னம் வட்டம், கல்லம்புதூரில் மாவட்ட ஆதி திராவிடர் (மற்றும்) பழங்குடியினர் நல அலுவலர் ஜெ.ராஜேந்திரன் தலைமையிலும்,
ஆலத்தூர் வட்டம், காரை கிராமத்தில் பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் ஆர்.கிருஷ்ணசாமி தலைமையிலும் 13.02.2016 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
மேற்படி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம் என தெரிவிக்கப்ட்டுள்ளது.