Perambalur District again tops the state in Class 11 pass!
பெரம்பலூர் மாவட்டம் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்விலும் 95.56 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது
பெரம்பலுார் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 79 பள்ளிகளைச் சேர்ந்த 3,922 மாணவர்களும், 3,740 மாணவிகளும் என மொத்தம் 7,662 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினர்.
இவர்களில் 3,671 மாணவர்களும், 3,651 மாணவிகளும் என மொத்தம் 7,322 மாணவ-மாணவிகள் 95.56 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் . கவுள்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியும், வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளியும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று காலம் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிகளை எவ்வாறு நடத்த வேண்டும், மாணவ-மாணவிகளுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அவ்வப்போது அறிவுரைகள் வழங்கப்பட்ட அறிவுரைகளை ஆசிரியர்கள் முறையாக பின்பற்றினார்கள்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடத்தையும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ள பெரம்பலுார் மாவட்டம் தற்போது பதினோறாம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளதால் சமூக ஆர்வலர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சில கலெகடர்களை போல், கலெக்சனை மட்டும் (வரி வசூல், மாவட்ட வருமானம்) கருத்தில் கொள்ளமல் தான் பணிபுரியும் மாவட்ட மக்களுக்கும், வரிப் பணத்தில் வாங்கும் சம்பளத்திற்கும் ஏதாவது உருப்படியாக செய்து சமூகத்தில் பின்தங்கிய மக்களும், கல்வியில் அதிக அளவு மதிப்பெண் பெற Super-30 உள்ளிட்ட திட்டங்கள், கல்விக்கடன்களை வழங்க செய்து அதிகளவிலான பேர்களை கல்வி பெற முன்னாள் கலெக்டர்கள் தரேஸ் அஹமது, நந்தக்குமார் போன்றவர்களையு இப்பெருமை சேரும்.