Perambalur district, AIADMK IT Wing executives consultative meeting held
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். பெரம்பலூர் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். திருச்சி மண்டல செயலாளர் வினுபாலன் சிறப்புரையாற்றினார். இதில் முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அறிவித்த கட்சி தலைமை நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தல், அரசு பள்ளியில் படித்த ஏழை மாணவர்களும் மருத்துவக்கல்வி பயிலும் வகையில் 7.5 சதவீத அரசாணை வெளியிட்டு சேர்க்கை அனுமதி வழங்கியமைக்கும், அவர்களது கல்வி கட்டத்தை அரசே ஏற்கும் என அறிவித்த தமிழக அரசிற்கும் நன்றி தெரிவிப்பது, வாக்காளர் பட்டியில் பெயர் சேர்த்தல், திருத்த முகாமில் நிர்வாகிகள் பணியாற்றுவது, மீண்டும் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்க முழுமையாக பணியாற்றுவது, கட்சி அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றிப்பெற்ற பாடுபாடுவது என்பன போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட இணைசெயலாளர் ராணி, ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், கர்ணன், சிவப்பிரகாசம், கிருஷ்ணசாமி, நகர செயலாளர் ராஜபூபதி, குரும்பலூர் பேரூர் செயலாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பெருமாள் வரவேற்றார். முடிவில் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.