Perambalur district DMK general members meeting! District Secretary Kunnam C. Rajendran notice!
பெரம்பலூர் திமுக மாவட்டச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் நவ.5 சனிக்கிழமை அன்று, காலை 10.00 மணிக்கு, தீயணைப்புத் துறை அலுவலகம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. மாவட்ட அவைத் தலைவர் அ.நடராஜன் தலைமையில், மாவட்டச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் (எனது) வரவேற்புரையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் நடைபெறும்.
இக்கூட்டத்தில், கழக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இருவரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய,நகர, பேரூர் கழக செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், வார்டு கழக செயலாளர்கள், கிளைக்கழக செயலாளர்கள், கழகத் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றும்,
நவம்பர் -05, அன்று மாலை 6.00 மணிக்கு, இந்தி திணிப்பை எதிர்த்து நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டம், கட்சியின் 15-வது தேர்தலில் அறிவிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல், கட்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும்,
இந்தி திணிப்பை எதிர்த்து பெரம்பலூர் மாவட்டத்தில் அன்றைய தினம் மாலை 6.00 மணியளவில், பழைய பேருந்து நிலையம், அம்பேத்கர் சிலை அருகில், நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்- தி.மு.க. முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர் என்றும், இக்கூட்டத்திற்கு கட்சியினர், நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.