பெரம்பலூர்: நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற மனைப்பிரிவுகள்

மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு; கலெக்டர் தகவல்!

schedule
2025-07-01 | 14:58h
update
2025-07-01 | 15:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Extension of time to regularize unauthorized plots/plots within the city planning office limits; Collector’s information!

பெரம்பலூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 30.06.2026 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, அரசாணை எண்.70, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை, நாள். 15.05.2025-ன் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.07.2025 முதல் www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும், 20.10.2016–க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் 01.07.2025 முதல் onlineppa.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பம் பதிவு செய்யலாம். எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகள் வரன்முறை செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.06.2026 - 18:31:03
Privacy-Data & cookie usage: