Farmer caught in Perambalur electric fence, dog died!
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள அம்மாபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (70), விவசாயி, இவர் எசனை எல்லைக்கு உட்டபட்ட பகுதியில் சொந்த நிலம் வாங்கி விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் இன்று காலை குளிப்பதற்கு சென்றார். அங்கு மக்காச்சோள வயலில் போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார். அப்போது அவருடன் வந்த நாயும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது, இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.