Perambalur Government Polytechnic College, who is eligible for admission to the 2nd year Direct.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டம், கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2019-2020-ஆம் கல்வியாண்டின் நேரடி இரண்டாமாண்டு பட்டய சேர்க்கைக்கு முதல் கட்ட கலந்தாய்வு 21.05.2019 அன்று நடைபெற்று முடிந்தது. மீதமுள்ள காலியிடம் 84-ஐ (அமைப்பியல் துறை (Civil Engg) காலியிடம் 36, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை (ECE) காலியிடம் 12 மற்றும் கணிப்பொறியியல் (CSE) காலியிடம் 36 நிரப்பி கொள்ள தொழில் நுட்பக் கல்வி இயக்கத்திலிருந்து அனுமதி கிடைக்கபெற்றமையை தொடா;ந்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு (Supplementary counseling) இக்கல்லூரி வளாகத்தில் 12.06.2019 அன்று காலை 10.30 மணி முதல் நடைபெற இருக்கிறது. எனவே, முதல் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாத மாணவ – மாணவியர்கள் மற்றும் பட்டய சேர்க்கைக்கு சேர விருப்பமுள்ள விண்ணப்பிக்காதவர்கள் அனைவரும் நேரடியாக கல்லூரிக்கு 12.06.2019 அன்று தவறாமல் வருகை புரிந்து பட்டய சேர்க்கையில் கலந்து கொண்டு சேர்க்கையினை பெறலாம்.

மேலும், மாணவியர்களுக்கு கல்லூரிக்கு அருகில் இலவச மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது. மற்றும் மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்தினுள் விரைவில் விடுதி தொடங்கப்படவுள்ளது. விருப்பமுள்ள மாணவ – மாணவியர்கள் விடுதியை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04328 – 243200 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம், என தெரித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!