பெரம்பலூர்: குடும்ப பிரச்சனையில் தீக்குளித்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை!

schedule
2024-09-23 | 18:17h
update
2024-09-23 | 18:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Intensive treatment for a woman who set herself on fire in a family dispute!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள இரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி இந்திராணி (47). குடும்ப பிரச்சினையால், நேற்று மாலை திடீரென தனது உடலில் கடலை எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிந்தது. இதில் வேதனை தாங்க முடியாத இந்திராணி அலறி துடிதுடித்து சத்தமிட்டார்.

Advertisement

அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இந்திராணியை மீது எரிந்து கொண்டிருந்து தீயை அணைத்தனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பாடாலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.08.2026 - 01:55:02
Privacy-Data & cookie usage: