Perambalur lakes ready to fill up!
தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருமழை, பச்சைமலை பகுதியில் அதிகளவு பொழிந்ததால், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்புலியூர், குரும்பலூர், ஏரி நிரம்பிய நிலையில், இன்று காலை பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறுவதை படத்தில் காணலாம். அரணாரை ஏரியும் நிரம்பியது. அதற்கு அடுத்து, இன்றுக்குள் பெரம்பலூர் பெரிய ஏரி, வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி, துறைமங்கலம் ஏரி என அடுத்தடுத்து ஏரிகள் நிரம்ப தயராகி வருகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் காலை வரை பதிவான மழையளவு விவரம் (மி.மீல்):
பெரம்பலூர் 12, செட்டிகுளம் 96, பாடாலூர் 17, அகரம்சிகூர் 1, லப்பைக்குடிக்காடு 7, புதுவேட்டக்குடி 0, எறையூர் 7 கிருஷ்ணாபுரம் 35, தழுதாழை 37, வி.களத்தூர் 4, வேப்பந்தட்டை 5, என மாவட்டத்தின் மொத்த மழையளவு 221மி.மீ, சராசரி மழை அளவு 20.09 மில்லி மீட்டராகும்.