பெரம்பலூர்: தமிழர்களை சுட்டு கொன்ற கர்நாடகத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கம் நீதிமன்றம் புறக்கணிப்பு; ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

schedule
2026-08-18 | 13:53h
update
2026-08-18 | 13:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Lawyers’ Association boycotts court proceedings and announces a protest to condemn Karnataka for shooting and killing Tamils.

Advertisement

பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகக் குழுவின் அவசர கூட்டம் அச்சங்கத்தின் தலைவர் இ. வள்ளுவன் நம்பி தலைமையில் இன்று பிற்பகலில் நடந்தது. அப்போது, பெற்றது. அதில், கர்நாட மாநிலத்தில், தமிழர்கள் அப்பாவி 3 பேரை கர்நாடக வனத்துறை சுட்டு கொன்றதை கண்டித்தும், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும் நாளை 19.08.2026 முதல் 21.08.2026-ந் தேதி வரை நமது சங்க உறுப்பினர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றப் பணிகளிலிருந்து விலகியிருப்பதென ஏகமனதாகவும், கோரிக்கைகளை வலியுறுத்தி 21.08.2026-ந் தேதி மாலை 4.00 மணியளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் நாராயணசாமி சிலை அருகில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.08.2026 - 14:03:58
Privacy-Data & cookie usage: