பெரம்பலூர்: கன்சியூமர் கோர்ட் திருவாரூர் உடன் இணைப்பு; எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டம்!

schedule
2026-08-27 | 06:47h
update
2026-08-27 | 06:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Lawyers boycott court in protest against the merger of the Consumer Court with Tiruvarur.

Advertisement


தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றங்களை 14 ஆக குறைத்து, பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தை திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்துடன் இணைத்து திருவாரூருக்கு மாற்றும் மத்திய அரசின் முடிவை பெரம்பலூர் வழக்கறிஞர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன், இதனால் பொதுமக்கள், நுகர்வோர் மற்றும் வழக்கறிஞர்களின் நலன் பெரிதும் பாதிக்கப்படும். இம்முடிவை உடனடியாக திரும்பப்பெற வேண்டியும், தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் பெரம்பலூரில் செயல்படவும் தமிழக அரசு மத்திய அரசு கவனத்திற்கு இந்த கோரிக்கைகளை உடனடியாக கொண்டு செல்லவேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்றும் நாளையும் இரு நாட்கள் மட்டும் இச்சங்க உறுப்பினர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றப் பணிகளிலிருந்து விலகி இருந்து தலைவர் இ.வள்ளுவன்நம்பி தலைமையில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நீதிமன்ற பணிகள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளன.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.08.2026 - 06:56:57
Privacy-Data & cookie usage: