Perambalur: Locks of three shops broken; ₹50,000 in cash and stock of beedis and cigarettes stolen! Police
பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூரை சேர்ந்தவர் கனகராஜ் @ ரமேஷ் (53) என்பவருக்கு சொந்தமான டீக்கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் இருந்த பணம் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் பீடி சிகரெட்டுகளை எடுத்துச் சென்ற மர்ம நபர்கள், இதேபோல மணிவேல் என்பவர் நடத்தி வரும் நியூமராலஜி சென்டரிலும், பாடாலூர் ராஜீவ் காந்தி நகரில் ஈஸ்வரன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கும் எதுவும் கிடைக்காததால் கடைகளை விட்டு வெளியேறினார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் சிசிடிவி மற்றும் மர்ம மனிதர்கள் விட்டுச் சென்ற தடயங்களை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.