Perambalur: Man killed after being hit by an unidentified vehicle; police investigating.
சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலை (NH-38), பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் உயிரிழந்த நபர் மற்றும் மோதிய வாகனங்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.