Perambalur – Mangoon substation power outages Notice
பெரம்பலூர் அருகே உள்ள மங்கூன் துணை மின்நிலைய பகிர்மானத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (நவ.24) மின் விநியோகம் இருக்காது, என செயற்பொறியார் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மின் கோட்டத்திற்கு உபட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற இருப்பதால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராமங்களான குரும்பலூர், பாளையம், புதுஆத்தூர், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், புதுஅம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூர் பிரிவு ரோடு, சிறுவயலூர், குரூர், மாவிலிங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, பொம்மனப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் வரும் வெள்ளிக்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.