பெரம்பலூர்: அமைச்சர் சிவசங்கர், வேப்பூர் ஒன்றியத்தில்,4.86 கோடியில் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்!

schedule
2025-07-10 | 14:03h
update
2025-07-10 | 14:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Minister Sivashankar inaugurated project work worth Rs 4.86 crore in Vepur union!

கி.குடிக்காடு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று ரூ.4.86 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் கனிமங்கள் மற்றும் சுரங்க நிதியின் கீழ் காடூர், புதுவேட்டக்குடி, வடக்கலூர் ஆகிய இடங்களில் தலா ரூ.9.15 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியையும், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நல்லறிக்கை – இலுப்பையூர் வரை ரூ.99.90 லட்சம் மதிப்பீட்டிலும், நல்லறிக்கை முதல் புதுக்குடிசை வரை ரூ.60 லட்சம் மதிப்பீட்டிலும், புதுவேட்டக்குடி – பென்னகோணம் சாலை முதல் கீழக்குடிக்காடு வரை ரூ.92.80 லட்சம் மதிப்பீட்டிலும், கிழுமத்தூர் குடிக்காடு முதல் கைப்பெரம்பலூர் வரை ரூ.48.00 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணியினையும்,

Advertisement

அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதுவேட்டைக்குடியில் ரூ.16.45 லட்சம் மதிப்பீட்டில் 470 மீட்டர் தூரமுள்ள ஆதிதிராவிடர் மயான சாலையினை மேம்படுத்தும் பணியினையும், காருகுடி ஆதிதிராவிடர் தெருவில் ரூ.4.00 லட்சம் மதிப்பீட்டில் வீட்டு குழாய் இணைப்பு வழங்கும் பணியினையும், சித்தளி ஊராட்சியில் பீல்வாடி முதல் ஆதிதிராவிடர் மயானம் வரை ரூ.16.10 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினையும்,15-வது நிதிக்குழு மானியத்தின் மூலம் காருகுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.5.92 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் அமைக்கும் பணியும் தொடங்கி வைத்தார்.

மேலும், ஊராட்சி பொது நிதியின் கீழ் புது வேட்டக்குடி ஊராட்சி மாரியம்மன் கோவில் முதல் ஆதிதிராவிடர் தெரு வரை ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் பைப்லைன் அமைக்கும் பணி, கைப்பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5.92 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுகாதார வளாகம் மற்றும் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் சுகாதார வளாகம் அமைக்கும் பணியினையும், கிழுமத்தூர் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5.92 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் மற்றும் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் கழிவறை அமைக்கும் பணியினையும், பழைய அரசமங்களத்தில் 80 குடும்பங்களுக்கு பைப்லைன் மற்றும் வீட்டு குழாய் இணைப்பு வழங்கும் பணியினையும், சின்னபரவாய் கிராமத்தில் செங்கமலை வீடு முதல் சின்னப்பொண்ணு வீடு வரை ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் மற்றும் கவர் ஸ்லாப் அமைக்கும் பணியினையும்,

எழுமூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தலா ரூ.4.16 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை அமைக்கும் பணியினையும், பீல்வாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலா ரூ.4.16 லட்சம் மதிப்பீட்டில் பெண்கள் மற்றும் ஆண்கள் கழிப்பறை அமைக்கும் பணியினையும், சித்தளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.4.16 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் கழிப்பறை அமைக்கும் பணியினையும், சித்தளி ஊராட்சி பிசி மயான பாதையை ரூ.16.00 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலையாக மேம்படுத்தும் பணியினையும், சித்தளி ஊராட்சி நடுத்தெருவில் சுதா வீடு முதல் மாலதி வீடு வரை ரூ.6.15 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.4.86 கோடி மதிப்பீட்டில் 26 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகளை தொடங்கி வைத்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ வரகூர் பா. துரைசாமி, ஒன்றிய செயலாளர் அழகு. நீலமேகம், திமுக பொதுக்குழு உறுப்பினர் பட்டுச்செல்வி ராஜேந்திரன், முன்னாள் வேப்பூர் சேர்மன் பிரபாசெல்லப்பிள்ளை, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மரகதவல்லி, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், சேகர், குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.06.2026 - 01:51:56
Privacy-Data & cookie usage: