பெரம்பலூர்: டாம்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெற சிறுபான்மையின மக்கள் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்!

schedule
2026-06-04 | 12:43h
update
2026-06-04 | 12:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Minorities can apply for financial assistance under the TAMCO scheme — Collector informs.

டாம்கோ மூலம் சிறுபான்மையினர்களுக்கு வேவைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனி நபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், விராசாத் (கைவினைக் கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20,00,000/-ம், திட்டம்2-ன் கீழ் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000/- கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000/- ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 10%, பெண்களுக்கு 8% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- கடன் வழங்கப்படுகிறது. மேலும், சிறுபான்மையின மாணவ மாணவியர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை / முதுகலை தொழிற்கல்வி / தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000/- வரையில் 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8%, மாணவியருக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000/- வரையிலும் கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது.

Advertisement

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் (ம) வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம / நகர்ப்புறங்களில் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் திட்டம்2-ல் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம / நகர்ப்புறங்களில் ரூ.8 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருக்க வேண்டும்.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசாத் கடன்(கைவினை கலைஞர் கடன் திட்டம்) கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்களான உபகரணங்கள் / கருவிகள்/ இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது.எனவே,சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவர்கள், இஸ்வாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களில் பெற்று அதனை பூர்த்தி செய்து வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக் கடன் மற்றும் விராசாத் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) திட்டத்திற்கு சிறுபான்மையினர் மதச் சான்றிதழ், சாதி சான்றிதழ்/வருமான சான்றிதழ்/குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்றிதழ்,ஆதார் அட்டை, திட்ட அறிக்கை, வங்கிகள் கோரும் இதர ஆவணங்கள் இணைக்க வேண்டும். மேலும், கல்விக்கடன் திட்டத்திற்கு சிறுபான்மையினர் மதச் சான்றிதழ், சாதி சான்றிதழ் / வருமான சான்றிதழ் நகல்/ இருப்பிட சான்றிதழ் நகல்/ குடும்ப அட்டை,ஆதார் அட்டை, உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) அசல், கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது அசல்(Original),மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கி கோரும் இதர ஆவணங்கள் இணைக்க வேண்டும்.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை சமூகத்தினர்கள் மேற்காணும் கடன் திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.06.2026 - 12:50:30
Privacy-Data & cookie usage: