பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் இரா.தமிழ்செல்வன் இன்று ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
முன்னதாக, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மங்கூன் கிராமத்தில் தனது பிரச்சாரத்தை துவங்கிய வேட்பாளர் இரா.தமிழ்செல்வன், குரூர்,சிறுவயலூர், புதுவிராலிப்பட்டி, பழையவிராலிப்பட்டி, புது அம்மாபாளையம், ஈச்சம்பட்டி, நக்கசேலம் உட்பட 20க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் வீதி, வீதியாக நடந்து சென்றும் பொது மக்கள் மற்றும் முதியவர்களின் காலில் விழுந்து கும்பிட்டும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தின் போது, அதிமுக அரசின் 5 ஆண்டுகால சாதனைகளை விளக்கி பேசிய வேட்பாளர் :
ஆலத்தூர் பகுதியில் பொதுமக்கள் முன் வைத்த தனி தாலுகா, தொழிற்பயிற்சி கல்லூரி, ஆவின் குளிரூட்டு நிலையம், ஜவுளி பூங்கா, வெங்காய குளிர் பதன கிடங்கு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாகவும்,
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தால் பொது மக்கள் முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் உடனுக்குடனே செய்து தருவதாக உறுதியளித்து தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் மற்றும் குரும்பாளையம் நாகராஜ், கட்சி தொண்டர்கள், ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர் உட்பட பலர் உடனிருந்தனர்.
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளருக்கு கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட அந்தந்த பகுதி பொது மக்கள் வெடி வெடித்தும், சால்வை அணிவித்தும், ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.