#Perambalur near Do not drinking at the time of sudden road blockade to protest the public with empty pots
பெரம்பலூர் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பொது மக்கள் திடீர் சாலை மறியல் நடத்தியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் அருகே உள்ளது வேலூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் வேலூர், கீழக்கணவாய் ரெங்கநாதபுரம் ஆகிய உள்ளிடக்கியது. இதில், கீழக்கணவாய் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊராட்சி சார்பில் வினியோகம் செய்யப்பட்டு வரும் குடிநீர் முறையா வழங்காமல் , இதனால் காலனித்தெருவில் வசிக்கும் 300க்கும் மேற்ப்பட்டோர் கடந்த 20 நாட்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாகவும், இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் முறையாக நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வந்துள்ளனர். இன்று நள்ளிரவு ஒரு மணிக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படும் அறிவித்து வினியோகம் செய்யததால் தூங்காமல் கண்விழித்ததால், ஆத்திரமடைந்த 100க்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் காலிக்குடங்களுடன் இன்று அதிகாலை 5 மணி அளவில் பெரம்பலூர் செட்டிக்குளம் வழியாக வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளை சிறைபிடித்து திடீர் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது மக்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் பெரம்பலூர் – செட்டிகுளம் சாலையில் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என அறிவித்தன் பேரில் அப்பகுதி மக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!