Perambalur near the missing gold chain, pawned during the rescue of the identify: Woman arrested
இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் ராஜ்குமார் மனைவி பழனியம்மாள் (வயது 40), என்பவர் பெரம்பலூர் ஸ்டேட் பேங் வங்கி கிளையில் அடகு வைத்திருந்த தங்க நகையை மீட்டுள்ளார். அப்போது அங்கு எதேச்சையாக வந்த நந்தினியின் மாமனார் அங்கு வந்துள்ளார்.
அப்போது தனது மருமகளின் தங்கசங்கிலி பழனியம்மாள் வைத்திருப்பதை உறுதி செய்த அவர் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பழனிம்மாளை கையும் களவுமாக பிடித்து, விசாரணை நடத்தினர். அப்போது, ஓர் ஆண்டுக்கு முன்பு நந்தினியின் வீட்டில் இருந்து திருடியதை ஒப்புக் கொண்டார்.
இதை அடுத்து அப்பெண்ணை பெரம்பலூர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, திருச்சி பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், திருடி போன நகை 5பவுன் தங்கசங்கிலியை பழனியம்மாளிடம் இருந்து மீட்டு, நந்தினியிடம் ஒப்படைத்தனர்.