Perambalur: Periyar’s birthday; Social Justice Day Pledge; Acceptance of government employees led by the collector!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழியினை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இன்று உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.
தமிழக அரசு தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17ஆம் நாள் அன்று ஆண்டுதோறும் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்க ஆணையிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வருகின்ற செப்டம்பர் 17ஆம் நாள் செவ்வாய் கிழமை அன்று மிலாடி நபி அரசு விடுமுறை நாளாக இருப்பதனால் வேலை நாளான இன்று சமூக நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.