201602024தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி, பெரம்பலூரில் சார் ஆட்சியர் ப.மதுசூதன்ரெட்டி தலைமையில் மக்கள் பிரதிநிதிகள் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட சங்குப்பேட்டை சமுதாய கூடத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடத்தப்படும் தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சியில் முதலமைச்சரின் சிறப்புத் திட்டங்களான விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்யம் வழங்கும் திட்டம்,

விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம், விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம், கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்,

விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம், இலவச சீருடை வழங்கும் திட்டம், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம், உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற அரசு நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட உள்ள இந்த புகைப்படக்கண்காட்சியை பார்வையிட்டு, தமிழக முதலமைச்சரால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்து பயன்பெறும் வகையில் இந்த புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெறும் இந்த புகைப்படக்கண்காட்சியானது பிப் 24 மற்றும் பிப். 25 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் 68 நபர்களுக்கு மரக்கன்றுகளை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார் ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன், அதிமுக மாவட்ட செயலாளருமான ஆர் .டி.ராமசந்திரன், பால் கூட்டுறவு சங்கத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!