Perambalur: Public relations program camp held in Aranarai (South) village; Perambalur Collector informs!
பெரம்பலூர் அரணாரை (தெற்கு), கிராமத்தில் வரும் 11.02.2026 (புதன்கிழமை) அன்று மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதற்கான பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, அரணாரை (தெற்கு) மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.