Perambalur: Public Relations Project Camp in Irur Village; Collector Announces!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், இரூர் கிராமத்தில் வரும் 12.08.2026 (புதன்கிழமை) அன்று தனது (கலெக்டர்) தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதற்காக பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, இரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.