பெரம்பலூர்: PM கிசான் திட்டத்தில் ரூ.10.30 கோடி வழங்கல்; மாவட்ட வேளாண் இயக்குனர் பாபு தகவல்!

schedule
2025-11-21 | 11:48h
update
2025-11-21 | 11:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Rs. 10.30 crore provided under PM Kisan scheme: District Agriculture Director Babu informed!

Advertisement

மத்திய அரசு சிறு, குறு விவசாயிகளுக்காக 2018ம் ஆண்டு பி.எம் கிசான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 5 ஏக்கருக்கும் குறைவாக விளைநிலம் கொண்ட விவசாயிகளுக்கு, 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 21வது தவணை தொகையாக ரூ.2ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேற்று நேரடியாக வரவு வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பெரம்பலுார் மாவட்டத்தில் 51 ஆயிரத்து 521 விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் வீதம் ரூ.10 கோடியே 30 லட்சத்து 42ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என பெரம்பலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பாபு தெரிவிதுள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 14:50:27
Privacy-Data & cookie usage: