பெரம்பலூர்: ரேசன் கடைகளில், கைவிரல் ரேகை பதிவு செய்யும் சிறப்பு முகாம்; கலெக்டர் தகவல்!

schedule
2026-08-27 | 15:01h
update
2026-08-27 | 15:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Special camp at ration shops to register fingerprints; Collector announces!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் 1,95,995 குடும்ப அட்டைகள் உள்ளது. இந்நிலையில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி ரேஷன் அட்டைகளில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விவரங்களை உறுதிப்படுத்தும் பொருட்டு கைரேகை, கண் கருவிழி பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆணையின்படி, அனைத்து வகையான குடும்ப அட்டைதாரர்களும், குடும்ப அட்டையில் உள்ள அனைத்து நபர்களும் தங்களது கைரேகையினை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இப்பணியினை மேற்கொள்வதற்கு ஏதுவாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் எதிர்வரும் 29.08.2026 (சனிக்கிழமை) அன்று கைரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் நியாய விலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்தி தங்களது கைரேகையினை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.08.2026 - 15:30:40
Privacy-Data & cookie usage: