Perambalur: Special grievance redressal meeting for persons with disabilities; Collector shares details!
பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் (தனது) தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் வரும் 09.07.2026 அன்று பகல் 12.00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். எனவே, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் தங்களது கோரிக்கைகளை மனுக்களை அளித்து பயன் பெறலாம் என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.