பெரம்பலூர்: சங்குபேட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜை, அன்னதானம்!

schedule
2025-09-21 | 17:11h
update
2025-09-21 | 17:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Special pooja and food distribution on the occasion of the Amavasai at the Sri Muthumariamman Temple in Sangupet!

பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருகோயில் புரட்டாசி மாதத்தில் வரும் அம்மாவாசையை யொட்டி 19வது வார்டு சங்குபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், ஜவ்வாது, தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து, வண்ண மலர்களால் அலங்கரித்து மாலை அணிவித்து சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகளும் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை பெண்கள் மற்றும் மகளிர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் வழிபட்டு அன்னதானம் வழங்கினர்

Advertisement

உலக நன்மைக்காகவும், பருவ மழை தவறாமல் பெய்து, தன தானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய் நொடி இல்லாமல் இருக்க பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர். 19 வார்டு அன்னதான குழுவினர் அபிஷேக பொருட்கள், மற்றும் அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாதம் தோறும் வரும் அம்மாவாசை, பெளர்ணமி நாட்களில் தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. விழாவில் முக்கிய பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பூசாரி நீதிதேவன் பூஜைகளை நடத்தி வைத்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.06.2026 - 12:22:23
Privacy-Data & cookie usage: