பெரம்பலூர் அருகே கரும்பு தோட்டம் தீயால் பாழ்!

schedule
2016-03-07 | 17:07h
update
2026-04-01 | 00:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (65)விவசாயி. இவர் ஊருக்கு அருகில் 5 ஏக்கர் நில பரப்பில் கரும்பு சாகபடி செய்திருந்தார்.

Advertisement

இந்நிலையில் இன்று மாலை அவரது வயலில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அருகிலிருந்தவர்கள் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அனைத்தனர். இருப்பினும் 4 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டிருந்த கரும்பு தீயில் கருகி சேதமடைந்தது. இது தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.04.2026 - 00:23:10
Privacy-Data & cookie usage: