Perambalur: The DMK has implemented various development projects—including high-level bridges—that had long been pending demands; DMK candidate Jayalakshmi campaigns, seeking votes for the ‘Rising Sun’ symbol!
பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பளாராக போட்டியிடும் ஜெயலட்சுமி மதசார்பற்ற கூட்டணி கட்சியினருடன் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்த பெரம்பலூர் – கடலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் வெள்ளாற்றில் குறுக்கே வெள்ளுவாடி – கொரக்கவாடி மேம்பாலம், திருவாலந்துறை – கீழக்கல்பூண்டி மேம்பாலம், பசும்பலூர் தாழ்ம்பூ ஓடை பாலம் என பசும்பலூர் மருத்துவனை, புதிய பேருந்துகள், புதிய வழிதடங்கள், மற்றும் திட்டக்குடி – சின்னசேலம் செல்லும் வகையில் புதிய வழித்தடத்தில் பேருந்து, வழித்தடநீட்டிப்பு என போக்குவரத்துறையிலும், பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், மகளிர் உரிமைத் தொகை, தமிழ்ப்புதல்வன் திட்டம், மகளிர் விடியல் பயணம் என பல திட்டங்கள் கடந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பசும்பலூருக்கு வந்த வேட்பாளர் ஜெயலட்சுமி உள்ளிட்ட கட்சியினருக்கு பசும்பலூர் கிளை செயலாளர் ஜெயபால் மற்றும் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவிஜெயபால் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பசும்பலூரில் வீதி வீதியாக கோசமிட்டு வாக்குகளை சேகரித்தனர்.
வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீஸ்வரன் ஏற்பாட்டில் வெண்பாவூர், பெரியவடகரை, பாண்டகப்பாடி, மாவிலிங்கை, அழகியபுரம், நெற்குணம், நூத்தப்பூர், பாளையம், சிறுநிலா, பாதங்கி, கைகளத்தூர், அய்யனார்பாளையம், காந்திநகர், பெருநிலா, பில்லாங்குளம், காரியனூர், வெள்ளுவாடி, சோலை நகர், பசும்பலூர், பிம்பலூர், அகரம், திருவாலந்துரை, ராம்ஜி நகர், மில்லத் நகர், வண்ணாரம் பூண்டி, களத்தூர், ராயப்பா நகர், மேட்டுச்சேரி, மறவநத்தம், மேட்டுமறவநத்தம், பேரையூர், தைக்கால், அயன் பேரையூர், பகுதிகளில் திமுக எம்.எல்.ஏ பிரபாகரன் மற்றும் மதசார்பற்ற கூட்டணி கட்சியை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், விசிக மாவட்ட செயலாளர் ந.கிருஷ்ணகுமார், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
முன்னதாக வ.களத்தூருக்கு வாக்கு சேகரிக்க வந்த திமுக வேட்பாளர் ஜெயலட்சுமிக்கு இஸ்லாமிய பெண்கள் சிறப்பு வரவற்பு அளித்து வாழ்த்துகள் தெரிவித்ததுடன், தீவிர வாக்குசேகரிப்பிலும் ஈடுபட்டனர்.