Perambalur: The first water pandal of the summer for the public on behalf of the police department; inaugurated by the SP!
பெரம்பலூர் மாவட்டம், 4 ரோடு பகுதியில், கோடைக்கால வெப்பத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தாகம் தணிக்கும் வகையில் மாவட்ட காவல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நீர்மோர் பந்தலை போலீஸ் எஸ்.பி அனிதா திறந்து வைத்தார்.
கோடைக்காலத்தில் பொதுமக்கள், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வெப்பத்தால் பாதிக்கப்படாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சமூக நலன் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும், காவல்துறை தொடர்ந்து பல்வேறு மனிதநேய சேவைகளையும் காவல் துறை செய்து வருவதாகவும், இந்த நீர்மோர் பந்தல் கோடைக்காலம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படும் என்றும் தெரிவித்தார்.
பெரம்பலூர் டி.எஸ்.பி ஆரோக்கியராஜ், ஹைவே டிராபிக் இன்ஸ்பெக்டர் கிள்ளிவளவன், ஹைவே டிராபிக் சப்-இன்ஸ்பெக்டர்கள் , போலீசார்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.