பெரம்பலூர்: டிராக்டரை திருடிச்சென்றவரை கண்டுபிடித்து கைது செய்த போலீசார்!

schedule
2024-10-09 | 16:00h
update
2024-10-09 | 16:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: The police have found and arrested the man who stole the tractor!

பெரம்பலூர் அருகே உள்ள பெருமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதனின் மகன் பிரேம்குமார் என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டர் அக் 1. அன்று நிறுத்திவிட்டு சென்று அடுத்தநாள் அதிகாலை 5.00 மணிக்கு வந்து பார்த்த போது டிராக்டர் சுழல் கலப்பையுடன் காணமல் போனது.

Advertisement

இது குறித்து அவர் மங்களமேடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர். அப்பகுதி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, அதே கிராமத்தை சேர்ந்த ராஜாங்கம் மகன் ராஜசேகர் என்பவர் பிரேம்குமாரின் டிராக்டரை சுழல் கலைப்பையுடன் திருடி சென்றது தெரியவந்தது.

ராஜசேகரை கைது செய்து மங்களமேடு சப் – இன்ஸ்பெக்டர் சங்கர், காணாமல் போன டிராக்டரை பறிமுதல் செய்ததோடு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2026 - 15:53:58
Privacy-Data & cookie usage: