Perambalur: Ungalai Thedi Ungal Ooril scheme in Veppanthattai Taluk; Collector inform.
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் வட்ட அளவில் பிரதி மாதம் 3வது புதன் கிழமை கலெக்டர் மற்றும் அனைத்து மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு. அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும். மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெறுகின்றனர்.
வரும் 19.08.2026 அன்று, பெரம்பலூர் மாவட்டம். வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் இம்முகாம் நடைபெறும். அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு, வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் அன்றைய தினம், கலெக்டர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு. அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்தும் மனுக்களைப் பெறவுள்ளனர்.
வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் மற்றும் தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளையும் மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.